Showing posts with label அனுபவச் சிறகுகள். Show all posts
Showing posts with label அனுபவச் சிறகுகள். Show all posts

Thursday, November 3, 2022

எலான் மாஸ்க்கும் எண்கணித சாஸ்த்திரமும் ! (Numerology for your success ! )






மணிமாறன் மண்ணிமாறன் ஆனகதை

 "நீங்கள் உஙகள் பெயரை இந்த எழுத்துக்களில் மாற்றிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். பண வரவு நீங்கள் நினைத்தாலும் நிற்காது.. .. 

**மணிமாறன் மண்ணிமாறன் ஆன கதை**
"நீங்கள் உஙகள் பெயரை இந்த எழுத்துக்களில் மாற்றிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். பண வரவு நீங்கள் நினைத்தாலும் நிற்காது.. .."என்று ஒரு சோதிடர் சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் அவரது பதிவான கூரையுள்ள, மழை கசிந்து நான் உட்கார்ந்திருந்த இடம் தவிர ஆங்காங்கு ஈரமாகவுள்ள, ஈரத்தினால் பயங்கரமான பூஞ்சை மணம் அடித்துக்கொண்டிருக்கிற, போதாக்குறைக்கு மழையில் நனையப்பிடிக்காமல் அவரது வீட்டுக்குள்ளேயே நின்று ஆடு போட்ட பழுக்கையும், படுத்திருந்த நாயிலிருந்து வந்த வாசத்தையும் சகித்தபடி.....அப்பப்பா பாலாவின் படங்களில் மட்டும் காணக்கூடிய காட்சி!
இது நடந்தது பத்து வருடங்களின் முன்னே, ஒரு நண்பனுடன் அவன் வற்புறுத்தலுக்காகச் சென்று சும்மா ஒரு ஆர்வக்கோளாரில் நானும் சோதிடருடன் பேசியபோது(பேய் இருக்கா ? இல்லையா ?)அவர் சொன்னவை இவை.
சாத்திரியாரே நீங்களும் உங்கள் பெயரை எண் கணிதசாஸ்த்திர முறைப்படி மாற்றிவிட்டால் பிறகென்ன உங்களுக்கும் காசு கொட்டோ கொட்டென்று கொட்டுமே..ஆட்டுக்கு ஒரு கொட்டிலாவது கட்டி வீட்டுக்கூரையில் நாலு ஒடுகளையென்றாலும் மாத்தலாமே ? என்று கேட்க நினைத்தேன், நண்பனின் தர்மசங்கடத்தை நினைத்துக் கேட்கவில்லை.

Saturday, September 4, 2021

ஆளில்லாத கடையும் ஆயிரம் கப் ரீயும்!



மதமென்னும் பெயரால் சுரண்டல்களும் - தேவையே இல்லாத ஆணி பிடுங்ககல்களும் -   "சாமி கண்ணைக்குத்தலாம்.." என்ற சந்தேகத்தில் வழங்கப்படும், கோயில், கட்டடம் சுண்ணாம்புக்கான கோடிக்கணக்கான  நன்கொடைகளும் - 'கொழுத்த முதலைகள்' அன்றி, சாதாரண மனித உயிர்கள் பயன்பெறாத செலவுகளும் இந்த ஒரு வீடியோ போதும் உணர. 

Thursday, May 7, 2020

படிக்காமல் படிப்பித்த கம்பியூட்டர் கோர்ஸ்

Stories for young entrepreneurs 02 (Learning is everything)  

நஸீபா எனது முதல் மாணவி



எனது முதலாவது மாணவி நஸீபாவும் அவரது குழந்தையும்-2019


1996 காலப்பகுதியில் என்கையில் ஒரு பழைய 386 கம்பியூட்டர் சிக்கியது. அதன் கட்டமைப்பைக்கேட்டால் இன்று பலருக்குச் 'சிப்புச் சிப்பாக' வரலாம். 33 Mhz வேகம்,40 MB ஹார்ட் டிஸ்க்,128 KB(As per my memory) மெமறி. ஆதனை ஆன் செய்து குளித்துமுடித்து வந்த பின்னர்தான் அது ஸ்ராட் ஆகி முடித்திருக்கும் அப்படி செத்த சிலோ.

ஆனாலும் அது எனக்குக் கனவுக்கன்னி, முதல் ஆசான் ,வழிகாட்டி ,வெற்றிக்கான ஏணிப்படி. என் இலட்சியக்கனவுகள் எல்லாவற்றிற்கும் 'அப்படியே ஆகட்டும் ' சொன்ன தேவதை.


எனது ஒன்றுவிட்ட அண்ணன் அதனை எனது மச்சாளுக்கு அனுப்பி-அவர் வீட்டிற்குச் அது செல்ல காத்திருந்த சமயத்தில் - அவனது  பெற்றறோருக்கும் மச்சாள் வீட்டுக்காறரிற்கும் ஏதோ கருத்துவேறுபாடு ஏற்பட்ட ஒரு  உறவுச் சுனாமிச்சூழ்நிலையில் எந்த அலையோ அடித்தொதுக்கி இறுதியாக என் கைசேர்ந்த கம்பியூட்டர் இது.

அந்த நேரத்திலேயே அது பழைய மொடல். ஆனாலும் இலங்கையே கம்பியூட்ர் பற்றி வியந்து பார்த்துக் கற்றுக்கொண்டிருந்த அந்தக்காலத்தில்(1996/..) சாதாரணர்களிற்கு அதன் வகை தொகை எல்லாம் இன்றிருப்பதுபோல் புரியாது. கம்பியூட்டர் என்றால் கம்பியூட்டர்தான்.

கொழும்பு மனிங்பிளேஸ் அடுக்குமாடியில் எனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தேன். கம்பியூட்டர் கைவரப்பெற்றாலும் கற்பதற்குப் பணமிருக்கவில்லை. இந்தக் கம்பியூட்டர் எனக்கு என்று முடிவாக முன்னர் 4-5 மாதங்கள் நான் தங்கியிருந்த அறையில்தான் இருந்தது. நடுச்சாமத்தில் பெரியம்மா பெரியப்பா உறங்கிய பின்னர், கம்பியூட்டரை ஆரம்பித்து அதில் வரும் டொஸ் புறம்ற்றில்(DOS prompt) என்ன செய்வதென்று தெரியாது விழித்துக்கொண்டிருப்பேன்.

MS DOS prompt - இருட்டு ரூமில கறுப்புப் பூனையக் கண்டுபிடி :)

அந்தக்கம்பியூட்டர் பல இலட்சங்கள் இருக்கும் என்று எண்ணி முதலில் அதை விற்பதற்கு முயன்றார் பெரியப்பா. அதனைப் பார்க்க வருபவர்கள் அதனது கறுப்புத்திரையில் Dir என்று அடிப்பதையும் Win என்று அடிப்பதையும் அதை அடித்ததும் அது கலர் திரையுடன் பல அற்புதங்கள் புரிவதையும் கண்டேன்.

வந்தவர்கள் 15 ஆயிரத்திற்கு மேல் கேட்கவில்லை  எனவே அது விற்பனையாகாமல் தப்பிவிட்டது.


அன்று இரவு கம்பியூட்டரை ஆரமபித்தேன் Win என்று அடித்தேன் ஆஹா வின்டோஸ்(வேர்க் குறூப்)என்ற அற்புதம் (Version 3.1) கண்ணில் பட்டது. ஆங்கில அறிவும் எதையும் உய்த்துணரும் தன்மையும ஏற்கனவே இலத்திரனியல் துறையிலும் தொழில்நுட்பக்கருவிகளிலும் கொண்ட பேராவலும் அது பற்றி நான் வாசித்திருந்த புத்தகங்களும் சேர்ந்து எனக்கு சொல்லிக் கொடுக்கத்தொடங்கின.

Friday, May 1, 2020

உங்க பேஸ்டில் உப்பு இருக்கா ?



நீங்கள் ரோஸ் கலர் பற்பொடியில் பல் தீட்டிய தலைமுறையா ? நாங்கள் எல்லாம் குழந்தைகளாக இருந்தபோது பற்பொடியால்தான் பல் தீட்டுவோம். எங்களது பாட்டி உப்புக்கலந்த கரியால் பல் தீட்டுவார். மாமா , சித்தப்பா போன்றோர் வேப்பங் குச்சியாலும் பற்பொடியாலும் கலந்து காலையில் பல் தீட்டுவதை நேரம் எடுத்து ஏதோ ஜிம்னாஸ்டிக் சாகசம் போலச் செய்வதைக் கண்டிருக்கிறேன்.

அப்போது கோபால் பற்பொடியும் பின்னர் உள்ளுர் தயாரிப்பான அண்ணா பற்பொடியும் மிகப்பிரபலம். ஒரு வகையான ரோஸ் நிறத்துக்கும் சிவப்பிற்கும் இடையிலான நிறத்திலிருந்கும் பற்பொடியும் அது தரும் இனிப்புச் சுவையும் இன்னும் மனதில் நிற்கிறது.நமக்குப் பல நாட்கள் பிரேக் பாஸ்ட்டே பற்பொடிதான் (தின்னுடுவேன் சார்).

Sunday, April 26, 2020

தயவு செய்து தொலைபேசியை வைக்கவும் :)


நாங்கள் யுத்தகாலக் குழந்தைகள். மூன்று வயதிலிருந்து சுமார் முப்பது வயது வரை துப்பாக்கிகள் வெடிக்கும் ஓசையும்,எறிகணைச் சத்தமும்,விண்ணிலிருந்து இராணுவம் பொம்மர்களில் வந்து போடும் குண்டு பறந்து வரும் ஓசையிலிருந்து பொளேர் என வீழ்ந்து அப்பாவி மக்கள் உயிர் குடிக்கும் ஓசையும் கேட்டு வளர்நதவர்கள்.

யுத்தகாலத்தின்  பெரும்பான்மையும் வடக்குப்பகுதி,  நாட்டின் தலைநகரம் கொழும்பு உட்பட்ட தெற்குடன் முற்றாகத் தரைவழித் தொடர்பில்லாதிருந்தது. மின்சாரம் நான் ஆறாம் வகுப்புத்தொடங்கிய காலத்திலிருந்து 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை வீடுகளிற்கு மின்சாரமும் இல்லை. தோலைபேசி என்ற  ஒன்றை வீட்டுப் பரணில் இருந்து எடுத்து விளையாடிய அனுபவம் உண்டு. தொலைத்தொடர்பை அனுபவித்ததே கிடையாது.

பல்கலைக்கழக அனுமதி கிடைப்பது இந்த வசதிகளற்ற இடத்திலிருந்து தப்பி தலை நகரத்திற்குச் செல்லும் ஓரளவு பாதுகாப்பான வழியாக இருந்தது.  

எனக்கும் அப்படி கொழும்பிற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. 

இதற்கு முதலும், யாரும் வடக்கிலிருந்து இலகுவில் கொழும்பு செல்ல முடியாதிருந்த நிலையிலும் இலக்கியத்தொடர்புகள் காரணமாக கொழும்பு சென்று சில நாட்களில் ஏக்கத்துடன் திரும்பியிருந்தேன்.

இந்த முறை அதிக காலம் கொழும்பை அனுபவிக்கலாம் என்ற ஆனந்தம்.

போன தடவை ஒரு இலக்கியக் குழுவோடு வந்தபோது "ரொட்டறிக்" சங்கத்தைச் சேர்ந்த ஜானகப் பெரேரா எனும் சிங்களத் தனவந்தர் ஒருவரோடு நல்ல அறிமுகம். எனது வட்டத்தில் ஆங்கிலம் ஓரளவு பேசக்கூடியவன் நான்.அதனால் அவரோடு உரையாடி நல்ல பழக்கம் இருந்தது. கொழும்பு வந்தால் தன்னைத்தொடர்பு கொள்ளச் சொல்லி அவரது தொலைபேசி இலக்கத்தைத் தந்திருந்தார்.

அங்கு சென்றதும் முதல் வேலையாக வெள்ளவத்தையில் தெருவில் உள்ள ஒரு தொலைபேசி பூத்தில் சில்லறைகளைப் போட்டு டயல் செய்தேன்.
தொலைபேசி ஒலித்தது, 

Monday, April 20, 2020

இராணுவச் சோதனை – மக்கள் மகிழ்ச்சி :எனக்குத் தமிழ் படிப்பித்த என்சினீயர்

என்ஜினீயர் கற்றுத் தந்த தமிழ் 

அண்மையில் பாடசாலைக் காலங்களில் அறிமுகமாகிப் பின்னா பேஸ் புக்கில் கொழுவிக்கொண்ட நபர் ஒருவரை(நண்பர் என்று குறிப்பிடும் அளவு உறவு இல்லை)எதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது.அவர் இந்தியாவில் கணிப்பொறியியல் பட்டம் படித்தவர், அவர் சொன்னார் ,
"மச்சான் நீ எழுதும் புளக் போஸ்ட்டுகள் யாருக்கும் விளங்காது - அவ்வளவு கடும் தமிழ் பாவிக்கிறாய், வாசிப்பவர்களுக்கு விளங்கும்படி எல்லோ எழுதோணும்,(கொஞ்சம் கோவமான தொனி) அவன் (இருவருக்கும் நண்பன்)  (ஆஸ்த்திரேலியாவிலிருக்கும் பொறியியலாளனாகிய) சிந்தூரனும்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).என்னோட கதைக்கேக்க 'மணி ஏதோ எழுதுது,ஒண்டும் விளங்கிறேல்ல' என்று நீ எழுதிய 'கண்டியில் பற்றிய தீ' என்ற (நாட்டு நிலை சார்ந்த) கட்டுரை பற்றிக் கதைக்கேக்க சொன்னான்" என்றும் இவர் எனக்குச் சொன்னார்.

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை