Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Friday, April 24, 2020

காதல் - காமம் என்ன வேறுபாடு ? கேள்வி பதில் By சிறுவன் !



விடுதலைப்புலிகள் தனியாட்சி செய்திருந்த யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் கைப்பற்றி , அரசாங்கத்தின் ஆட்சி இரண்டு வருடங்களைக் கடந்து கொண்டிருந்த நேரத்தில் கொழும்பில் பாதுகாப்பாக இருந்த நான் , திருகோணமலையிலிருந்து  சரக்குக் கப்பலின் அடித்தட்டில் படுத்து (அப்போதிருந்த ஒரே போக்குவரத்து வழி) 21 வயதில், தமிழ் மேல் தீராத காதலும்,வாசிப்பு வெறியும், பொங்கும் கவிதையும் - இவையெல்லாம் கலந்த கொப்புளிக்கும் கனலாய்  யாழ்ப்பாணம் வந்து சேர்ந்திருந்தேன். 

1996 – ஆனந்த விகடன் ,குமுதம் என்ற பத்திரிகைகள் எல்லாம் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் , உதயன் செய்திப்பத்திரிகை தவிர வாசிக்க  வேறு எதுவுமற்ற நிலையில் , நான் ஆரம்பித்த பல்சுவை வார இதழ் 'திசை முகம்'

அதனாலே நான் பட்ட பாடு உரல் படுமோ உளிபடுமோ நான் அறியேன்.
அப்போது பிரபலமாயிருந்த மறைந்த குமுதம் ஆசிரியர் 'அரசு' போல யாருக்கும் நான் யார் என்று தெரியத்தேவை இல்லை , என் எழுத்துக்களே தெரியவேண்டும் என(பயத்தால அல்ல- பயமா? அது என்ன விலை?) எழுத்தாளர் சுஜாத்தா என்கிற ரங்கராஜன் போல ,'தமயந்தி' எனும் புனை பெயரில் எழுதி வந்தேன்.

Wednesday, April 8, 2020

மயிர்கொட்டி ஞானம் -ச.முகுந்தன் கவிதையும் உரையும்.



எனது நண்பனும் நாடறிந்த நல்ல கவிஞருமாகிய ச.முகுந்தன்(விரிவுரையாளர்,யாழ் பல்கலைக்கழகம்)பல வருடங்களிற்கு முன்னர் தான் எழுதிய கவிதை ஒன்றை அண்மையில் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அதன் பொருள் புரியவில்லை என்று இன்னும் சில பள்ளித் தோழர்கள் புரிந்து கொள்ளும் உண்மையான அக்கறையில் கேட்டுக்கொண்டதால் இந்தக் கொரோனா விடுமுறையைக் கொஞ்சம் தமிழ்ப்பணிக்கும் ஒதுக்கலாமே என்ற ஒரு சின்ன நல்லெண்ணத்தில் என் நண்பர்களுக்காக எழுதிய பொருள் விழக்கம் இது :)

உண்மையில் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி  ஆழமான கவிதைகள் புரிவதில்லை என்கிற மற்றும் நீலப்படம்போல தேடித் தெரிந்துகொள்ள எதுவுமில்லாத கவிதைகளை எழுதுகிற இளம் கவி ஆர்வலர்களிற்கு ஒரு வழிகாட்டியாக இது அமையலாம் என்ற  நோக்கிலேயே  எழுதப்பட்டுள்ளது.  

மயிர்கொட்டி ஞானம் -  ச.முகுந்தன்

கவிதையை உணர்ந்துகொள்ள முதலில் அது பிறந்த கால நேரத்தையும் இடத்தையும் பின்னணியையும் அறிந்துகொள்ளல் நலம். அது கவிஞர் கருதியதை நாமும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவி செய்யும்.
இந்தக் கவிதை இராணுவக் காவலரண்கள் முழத்துக்கு முழம் நிறைந்திருந்த கொடிய உள்நாட்டு யுத்தக் காலப்பகுதியில் எழுதப்பட்டுள்ளது. இந்தச் சின்ன ஊரடங்கிற்கே பல இளையவர்கள் சலித்துக்கொள்கிறார்கள் நாங்களெல்லாம் மாதக்கணக்கான ஊரடங்குகளையும், வருடக்கணக்கான பயணத்தடைகளையும் கண்டவர்கள். 

1 கிலோ மீட்டர் பாதையில் 3 தடவை  வாகனத்திலிருந்து இறங்கி ஆளடையாளம் மற்றும் குண்டு இருக்கிறதா எனப்பார்க்கும் உடல் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். (கவிஞர் சொன்ன 'தடவல்' இதுதான்) அதுவும் நீங்கள் இப்போது பார்க்கும் இளகிய முகமுடைய இராணுவம் அல்ல அது. கொலைவெறி பிடித்த அல்லது மரணபயம் நிறைந்த கோர முகங்கள். அவர்களைக் காணும் ஒவ்வொரு சமயமும் உயிர்போய் உயிர் வரும்.

இந்த நேரத்தில் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த இளையவரான கவிஞர் – யுத்த சூழ்நிலையால் தனக்குக் கிடைக்காத சுதந்திரத்தை ஒரு மயிர்கொட்டி(மசுக்குட்டி)உடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்.(அந்த அற்பப் புழுவின் உரிமைகூட நமக்கு இல்லையே என்ற ஏக்கம் கவிதை எங்கும் விரவியிருக்கும்)

கடுமையான பத்திரிக்கைத் தணிக்கை அமுலில் உள்ள(மீறின் சுடப்படக்கூடிய சூழ்நிலையும் இருந்தது) சூழலில் தான் விரும்பும் கருத்தை புரியக்கூடியவர்களிற்கு மட்டும் புரியும்படி சொல்லவும், சம்பந்தப்பட்டவர்கள்(அதிகார வர்க்கம்) பிரச்சினைக்கு வந்தால் "அதன் அர்த்தம் இது கிடையாது சாமி" என்று இன்னொரு அர்த்தத்தைக் கோர்த்து விட்டு எஸ்கேப் ஆகவும் கவிதைதான் சிறந்த வழி.அதுதான் உலக வரலாற்றில் பல நல்ல கவிஞர்கள் யுத்த காலங்களில் தோன்றியிருக்கிறார்கள் போலும். இப்போதெல்லாம் அந்த இடத்தை கார்ட்டூன்கள் எடுத்துவிட்டன

இந்தப் பின்புலத்துடன் அவர் கவிதையைப் பார்க்கலாம்.


பச்சைகளைக் கண்டஞ்சும்
பரிதாபி ஜீவன்யான்

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை