Showing posts with label சுயசரிதம் - வாழ்ந்து பார்த்தவை. Show all posts
Showing posts with label சுயசரிதம் - வாழ்ந்து பார்த்தவை. Show all posts

Tuesday, August 10, 2021

சிரித்து வாழ வேண்டும். ! - சிறீ விசாகராஜா ஆசிரியர்

 யாழ் இந்துவின் பொக்கிஷத்தில் ஒரு முத்து - சிறீ விசாகராஜா ஆசிரியர். வாழும் முறையை இவரிடமும் கற்கவேண்டும். 


 நெஞ்சில் வஞ்சமில்லாத சிரிப்புடனும் எப்போதும் தேனி போன்ற சுறுசுறுப்புடனும் காணப்படக்கூடிய  ஆசிரியர் 'விசாகர்' என அறியப்பட்ட சிறீவிசாகராஜா அவர்கள். இந்த நல்ல மனிதர் அண்மையில் மீளாத் துயில் கொண்டார். 

நான் அவரிடம் படித்திருக்கிறேன். அவரிடம் கற்ற அனுபவத்தைவிட  அவரது அணுக்கம் தரக்கூடிய மகிழ்ச்சி,  நிம்மதி என்பனவே எனக்கு அவரை எண்ணியதும் நெஞ்சில் நிறைகிறது. அதுதான் ஒரு நல்ல ஆசிரியரின் முதல் தகுதி என்று எண்ணுகிறேன்.

தன்னுடைய இரத்த அழுத்த நோயால் வரும் அவதியை பச்சிளம் பாலகர்களது கையைத் திருகியும் கண்டபாட்டிற்கு அடித்தும் காட்டும் சண்முகலிங்கம் சேர், பிள்ளைகளின் பிஞ்சு விரல்களை நெரித்து மகிழும் செட்டியார் சோமசுந்தரம் சேர், கண்ட இடத்தில் சிறு தவறைக் கண்ட மாத்திரத்தில் கன்னம் கன்னமாக கைகளாலையே மேனியா போல் பின்னியெடுக்கும் தவமணிதாசன் சேர் முதலியவர்களால் தினசரி பாடசாலை செல்வதே இராணுவ முகாமிற்கு பயிற்ச்சிக்குப்போவதுபோல் மன அழுத்தம் தரக்கூடியதாக என்போன்ற குறும்பு செய்யும் மாணவர்களிற்கு  இருந்தது .

Thursday, May 20, 2021

சின்ன வீடு - பெரிய வீடு





"ரைல்ஸ்சுக்கும் பாத்ரூம்வெயாருக்கும் மட்டும் நாலு மில்லியன் முடிஞ்சுது மச்சான்" என்று தொலை பேசியில் பேசும்போது அடுத்த இரண்டு தெரு தள்ளியிருக்கும் வங்கி அதிகாரியான நண்பன் சொன்னான்.

இன்னொரு நண்பனின் மாளிகை வீட்டின் படங்களை அதைக்கட்டிய நிறுவனம் ஃபேஸ்புக்கில் போட்டு நாம்தான் கட்டினோம் என விளம்பரப்படுத்திய போது அதன் அழகை நானும் படங்களில் இரசித்தேன்.

"கலம்பு (Colombo)-7" ஏரியா மினிஸ்டர் மார் வீட்டு Gate போலவே செய்து போட்டிருக்கிறேன் என்று ஒரு மகாவைத்திய நண்பன் ஹொட்டேல் பட்ஜ்மேட் சந்திப்பு ஒன்றில் சொன்னான்.

இப்படி பல பல மாளிகைகள் நம் நண்பர்கள் பலருக்கு.

என் வீட்டில் இவர்களில் பலர் பல விருந்துகளில் கலந்து சிறப்பித்திருந்தார்கள் (விருந்து மறந்து சில நாட்களில் கோல் வரும் : "அடுத்த பார்ட்டி எப்ப மச்சான்?"- no outgoing, only incoming :) )

Thursday, May 21, 2020

சொஃப்ற்வெயாரில் சொருகிய ஆப்பு !


Any software developer out there - you guys suck !

சாய்ந்தமருதில் இலியாஸ் என்பவர் நடாத்திய(DTP) ரைப் செற்றிங் செய்யும் ஒரு நிறுவனத்திற்குத் தான் எனது முதலாவது வர்த்தக ரீதியான அப்பிளிகேசன் ஒன்றை விற்றேன்.  கணினி மூலம் அவர் செய்யும் பக்க வடிவமைப்புக்களில் பெருந்தொகையான படங்களைப் பயன்படுத்துவதால் - அவற்றை ஒழுங்கமைத்துப் பார்வையிடவும் - மீண்டும் அதை பேஜ்மேக்கரில் உடனடியாகப் பயன்படுத்தவும் (ACD See போன்ற பிக்சர் எக்ஸ்புளோரர்) அவரிற்கு ஒரு அப்பிளிக்கேசன் தேவைப்படுவதை நான் உணர்ந்தேன். அவர் எனது கம்பியூட்டர் கஸ்டமர். (இன்று விண்டோஸ் இயங்குதளமே அதைச் சிறப்பாகச் செய்யும் எனினும் அந்தநேரத்தின் விண்டோஸ் 95 சரியாகச் செயற்படாது. )

எனது ஆலோசனைக்கு ஏற்ப படங்களைப் பார்வையிடும் ஒரு இமேஜ் வியூவர் ஒன்றை நான் செய்து தர சம்மதித்தார். எனது முதலாவது மென்பொருள் தயாரிப்பு அதுதான். விசுவல் பேசிக் 4.0/5.0 என்று நினைக்கிறேன். அதில் இருந்த picture box மற்றும் dir list etc ஜ பயன்படுத்தி பார்க்கும் படத்தை ஓரு கிளிக்கில் கொப்பி பண்ண ஒரு பட்டனையும் சேர்த்து அழகிய இன்ரர்பேசில் ஒரு பிக்சர் வியூவரை அவரிற்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்றேன். 

அந்த நேரத்தில் அது பெரும்தொகை. விண்டோசையே கிட்டத்தட்ட  இலங்கைத்திருநாடு முழுவதுமே 100 ரூபாய் பைறேற்றட் சி.டி யில் இருந்து போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அது பெரும்தொகை. எனினும் அவரது வேலை இலகுவானதால் அவரது பின்னூட்டம்(Feedback) மிக நன்றாகவே இருந்தது. நான் கல்முனையில் இருந்து கொழும்பிற்குப் பார்சல் ஆகும்வரை அவர் எனது நல்ல வாடிக்கையாளராகவே இருந்தார்.

அதன் பின்னர் நிந்தவூரில் இயங்கி வந்த பெரிய குளிர்பானக் கம்பனியின் ஏஜண்டிற்கு அவர்களது போத்தல்களை கையாளும்(வெற்றுப்போத்தல்கள் வருதல் போதல்) ஒரு மென்பொருள் தயாரிக்கும் ஓடரைப் பெற்றேன். – அது பெரிய வேலை என்பதால் கொழும்பிலிருந்து அனுபவமுள்ள சொப்ற்வெயார் என்ஜினியர் ஒருவரை தற்காலிக ஒப்பந்தம் பேசி கல்முனைக்கு என்செலவில் இறக்குமதி செய்து – உதவியைக் கேட்டேன். 

Tuesday, May 19, 2020

மை நைஜீரியன் பிரதர் அன்ட் மில்லியன் டாலர்ஸ்




2004 ஆம் ஆண்டில் எனக்கொரு ஈமெயில் வந்திருநதது. கொழும்பில் நமது கணினி வர்த்தகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. நாட்டின்  

கொடிய யுத்த சூழ்நிலைகளால் - வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கபட்டுக்கொண்டிருந்த சமயம். இரவு வெகுநேரமாகத் தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்துவிட்டு - அருகிலிருந்த லப்ரொப்பில் ஈமெயிலைச் செக் பண்ணிக்கொண்டிருந்தேன். Financial Proposal என்ற தலைப்பில் ஒரு ஈமெயில் வந்திருந்தது.

நாமும் பைனான்ஸ் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது யாரோ பைனானஸ்சியல் புரபோசால் எழுதுகிறானே என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டே அதைத் திறந்து பார்த்தேன்.

பழம் நழுவிப்பாலில் விழுந்து அப்புறம் குலாப் ஜாமூன்,நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்புபாதாம்,பிஸ்த்தா எல்லாம் சேர்ந்து தானாகலே வாயில் வந்து ஊட்டியது போல ஒரு செய்தி ஈமெயிலில் இருந்தது.

அந்த ஈமெயிலின் சுருக்கம் இதுதான்:

Thursday, May 7, 2020

படிக்காமல் படிப்பித்த கம்பியூட்டர் கோர்ஸ்

Stories for young entrepreneurs 02 (Learning is everything)  

நஸீபா எனது முதல் மாணவி



எனது முதலாவது மாணவி நஸீபாவும் அவரது குழந்தையும்-2019


1996 காலப்பகுதியில் என்கையில் ஒரு பழைய 386 கம்பியூட்டர் சிக்கியது. அதன் கட்டமைப்பைக்கேட்டால் இன்று பலருக்குச் 'சிப்புச் சிப்பாக' வரலாம். 33 Mhz வேகம்,40 MB ஹார்ட் டிஸ்க்,128 KB(As per my memory) மெமறி. ஆதனை ஆன் செய்து குளித்துமுடித்து வந்த பின்னர்தான் அது ஸ்ராட் ஆகி முடித்திருக்கும் அப்படி செத்த சிலோ.

ஆனாலும் அது எனக்குக் கனவுக்கன்னி, முதல் ஆசான் ,வழிகாட்டி ,வெற்றிக்கான ஏணிப்படி. என் இலட்சியக்கனவுகள் எல்லாவற்றிற்கும் 'அப்படியே ஆகட்டும் ' சொன்ன தேவதை.


எனது ஒன்றுவிட்ட அண்ணன் அதனை எனது மச்சாளுக்கு அனுப்பி-அவர் வீட்டிற்குச் அது செல்ல காத்திருந்த சமயத்தில் - அவனது  பெற்றறோருக்கும் மச்சாள் வீட்டுக்காறரிற்கும் ஏதோ கருத்துவேறுபாடு ஏற்பட்ட ஒரு  உறவுச் சுனாமிச்சூழ்நிலையில் எந்த அலையோ அடித்தொதுக்கி இறுதியாக என் கைசேர்ந்த கம்பியூட்டர் இது.

அந்த நேரத்திலேயே அது பழைய மொடல். ஆனாலும் இலங்கையே கம்பியூட்ர் பற்றி வியந்து பார்த்துக் கற்றுக்கொண்டிருந்த அந்தக்காலத்தில்(1996/..) சாதாரணர்களிற்கு அதன் வகை தொகை எல்லாம் இன்றிருப்பதுபோல் புரியாது. கம்பியூட்டர் என்றால் கம்பியூட்டர்தான்.

கொழும்பு மனிங்பிளேஸ் அடுக்குமாடியில் எனது பெரியம்மா வீட்டில் தங்கியிருந்தேன். கம்பியூட்டர் கைவரப்பெற்றாலும் கற்பதற்குப் பணமிருக்கவில்லை. இந்தக் கம்பியூட்டர் எனக்கு என்று முடிவாக முன்னர் 4-5 மாதங்கள் நான் தங்கியிருந்த அறையில்தான் இருந்தது. நடுச்சாமத்தில் பெரியம்மா பெரியப்பா உறங்கிய பின்னர், கம்பியூட்டரை ஆரம்பித்து அதில் வரும் டொஸ் புறம்ற்றில்(DOS prompt) என்ன செய்வதென்று தெரியாது விழித்துக்கொண்டிருப்பேன்.

MS DOS prompt - இருட்டு ரூமில கறுப்புப் பூனையக் கண்டுபிடி :)

அந்தக்கம்பியூட்டர் பல இலட்சங்கள் இருக்கும் என்று எண்ணி முதலில் அதை விற்பதற்கு முயன்றார் பெரியப்பா. அதனைப் பார்க்க வருபவர்கள் அதனது கறுப்புத்திரையில் Dir என்று அடிப்பதையும் Win என்று அடிப்பதையும் அதை அடித்ததும் அது கலர் திரையுடன் பல அற்புதங்கள் புரிவதையும் கண்டேன்.

வந்தவர்கள் 15 ஆயிரத்திற்கு மேல் கேட்கவில்லை  எனவே அது விற்பனையாகாமல் தப்பிவிட்டது.


அன்று இரவு கம்பியூட்டரை ஆரமபித்தேன் Win என்று அடித்தேன் ஆஹா வின்டோஸ்(வேர்க் குறூப்)என்ற அற்புதம் (Version 3.1) கண்ணில் பட்டது. ஆங்கில அறிவும் எதையும் உய்த்துணரும் தன்மையும ஏற்கனவே இலத்திரனியல் துறையிலும் தொழில்நுட்பக்கருவிகளிலும் கொண்ட பேராவலும் அது பற்றி நான் வாசித்திருந்த புத்தகங்களும் சேர்ந்து எனக்கு சொல்லிக் கொடுக்கத்தொடங்கின.

Tuesday, May 5, 2020

கொழும்புக்கு வந்த சோதனை !


பாத்ரூமுக்குள் நண்பனின் பகீர் அனுவபம் !

கடும் யுத்த சூழலில் கொழும்புக்கு வந்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்தபின்னர் நடைபெறும் ஆங்கில வகுப்பிற்காக(GELT) காத்திருந்த காலங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டே இருந்தன.

தினசரி சந்தித்துக்கொள்ளும் எம் நட்புவட்டத்தில் சுமார் – 5-6 நபர்கள் இருப்பார்கள். என்னைத்தவிர அதில் பெரும்பான்மை, மெரிட்டில் கொழும்பு மருத்துவ பீடத்திற்கு தெரிவானவர்கள்.  


நாங்கள் தினசரி  வெள்ளவத்தைப் போலீஸ் ஸ்டேசன் அருகில்,ஹாமேர்ஸ் அவெனியூவில் உள்ள  நண்பன் நாகரூபன் வீட்டில் ஒன்று கூடுவோம்.வந்து நாலு மாதங்களின் பின், ஒரு நாள் வழமைபோல் நாகரூபன் வீட்டில் நண்பர்களது அலட்டல் கச்சேரி போய்க்கொண்டிருந்தது. என்னருகே அமர்ந்திருந்த நண்பன் முருகன்,(சத்தியமாய்ப் பெயர் மாற்றப்பட்டுள்ளது) முகத்தை படு சீரியசாக வைத்துக்கொண்டு சொன்னான்:

Sunday, May 3, 2020

கம்பசுக்குப்போய் கம்பியூட்டர் விற்ற கதை

Stories for young entrepreneurs 

தினசரி வெயிலில் கடும் ஓட்டம்-எரிந்த தோற்றம்
My Kalmunai office - See the plants ,which was my passion

அப்போது நான் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவன் - உழைத்தே என் பிழைப்பை பார்க்கவேண்டிய யுத்தகாலச் சூழ்நிலை.முட்டிமோதி கம்பியூட்டர் ஒன்றை வைத்து வகுப்புக்கள் எடுக்க ஆரம்பித்திருந்தேன்.(அந்தக் கம்பியூட்டர் கிடைத்தது பெரும் கதை - பின்னர் வரும்)

அதற்கிடையில் பல்கலைக்கழக மட்டத்திலேயே பேர்சனல் கம்பியூட்டர் ஒன்றை சொந்தமாக வைத்திருந்த மாணவன் என்ற அடிப்படையிலும் நான் மிகப்பிரபலமடைந்திருந்தேன். (1997)

"நீ என்ன புலியா? உளவுபாக்கவா யாழ்ப்பாணம் விட்டு இந்தக் கம்பசுக்கு வந்தனீ,இது பிரபாகரன் தந்த கம்பியூட்டரா ? "என்று அன்பான விசாரிப்புக்களும் அடிக்கடி நடக்கும்.

கொழும்பில் எனது நண்பனொருவன் கம்பியூட்டர்களை உதிரிப்பாகங்களாக வாங்கி ஒன்றாகப்பூட்டி விற்பனை செய்துவந்தான். கம்பியூட்டர் அசெம்பிளிங் என்பது ஏதோ என்ஜினியரிங் லெவலில் பார்க்கப்பட்ட நேரம் அது.

எனது பல்கலைக்கழக கணினி விரிவுரையாளர் திரு.மகேந்திரன் என்பவர் ஒரு அற்புதமான மனிதர். அப்போது அம்பாறை மின்சார சபையின் பிரதம பொறியியலாளராகவும் எமக்கு வருகைதரு விரிவுரையாளராகவும் இருந்தவர். மனித நேயர்.

வாழ்க்கையில் தொழில்ரீதியாகவும் முன்னேற நான் போராடிக்கொண்டிருந்த நேரம் அது. என் முயற்சிகள் அவரிற்குத்தெரியும். அவரிற்குப் பிடித்தமான மாணவன் நான். அவர் என்னை ஒருநாள் அழைத்து "டேய் நீ கொம்பியூட்டர் எடுத்துக்கு டுக்கிறனியோடா ?' (கொழும்பிலிருந்து) எனக்கேட்டார், தயங்காமல்  "ஓம் சேர்". என்ற முதலாவது வெற்றிக்கான பொய்யைச் சொன்னேன்.(எனது கொழும்பு நண்பனை நினைவில் வைத்து)

Sunday, April 26, 2020

தயவு செய்து தொலைபேசியை வைக்கவும் :)


நாங்கள் யுத்தகாலக் குழந்தைகள். மூன்று வயதிலிருந்து சுமார் முப்பது வயது வரை துப்பாக்கிகள் வெடிக்கும் ஓசையும்,எறிகணைச் சத்தமும்,விண்ணிலிருந்து இராணுவம் பொம்மர்களில் வந்து போடும் குண்டு பறந்து வரும் ஓசையிலிருந்து பொளேர் என வீழ்ந்து அப்பாவி மக்கள் உயிர் குடிக்கும் ஓசையும் கேட்டு வளர்நதவர்கள்.

யுத்தகாலத்தின்  பெரும்பான்மையும் வடக்குப்பகுதி,  நாட்டின் தலைநகரம் கொழும்பு உட்பட்ட தெற்குடன் முற்றாகத் தரைவழித் தொடர்பில்லாதிருந்தது. மின்சாரம் நான் ஆறாம் வகுப்புத்தொடங்கிய காலத்திலிருந்து 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை வீடுகளிற்கு மின்சாரமும் இல்லை. தோலைபேசி என்ற  ஒன்றை வீட்டுப் பரணில் இருந்து எடுத்து விளையாடிய அனுபவம் உண்டு. தொலைத்தொடர்பை அனுபவித்ததே கிடையாது.

பல்கலைக்கழக அனுமதி கிடைப்பது இந்த வசதிகளற்ற இடத்திலிருந்து தப்பி தலை நகரத்திற்குச் செல்லும் ஓரளவு பாதுகாப்பான வழியாக இருந்தது.  

எனக்கும் அப்படி கொழும்பிற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. 

இதற்கு முதலும், யாரும் வடக்கிலிருந்து இலகுவில் கொழும்பு செல்ல முடியாதிருந்த நிலையிலும் இலக்கியத்தொடர்புகள் காரணமாக கொழும்பு சென்று சில நாட்களில் ஏக்கத்துடன் திரும்பியிருந்தேன்.

இந்த முறை அதிக காலம் கொழும்பை அனுபவிக்கலாம் என்ற ஆனந்தம்.

போன தடவை ஒரு இலக்கியக் குழுவோடு வந்தபோது "ரொட்டறிக்" சங்கத்தைச் சேர்ந்த ஜானகப் பெரேரா எனும் சிங்களத் தனவந்தர் ஒருவரோடு நல்ல அறிமுகம். எனது வட்டத்தில் ஆங்கிலம் ஓரளவு பேசக்கூடியவன் நான்.அதனால் அவரோடு உரையாடி நல்ல பழக்கம் இருந்தது. கொழும்பு வந்தால் தன்னைத்தொடர்பு கொள்ளச் சொல்லி அவரது தொலைபேசி இலக்கத்தைத் தந்திருந்தார்.

அங்கு சென்றதும் முதல் வேலையாக வெள்ளவத்தையில் தெருவில் உள்ள ஒரு தொலைபேசி பூத்தில் சில்லறைகளைப் போட்டு டயல் செய்தேன்.
தொலைபேசி ஒலித்தது, 

Friday, April 24, 2020

காதல் - காமம் என்ன வேறுபாடு ? கேள்வி பதில் By சிறுவன் !



விடுதலைப்புலிகள் தனியாட்சி செய்திருந்த யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் கைப்பற்றி , அரசாங்கத்தின் ஆட்சி இரண்டு வருடங்களைக் கடந்து கொண்டிருந்த நேரத்தில் கொழும்பில் பாதுகாப்பாக இருந்த நான் , திருகோணமலையிலிருந்து  சரக்குக் கப்பலின் அடித்தட்டில் படுத்து (அப்போதிருந்த ஒரே போக்குவரத்து வழி) 21 வயதில், தமிழ் மேல் தீராத காதலும்,வாசிப்பு வெறியும், பொங்கும் கவிதையும் - இவையெல்லாம் கலந்த கொப்புளிக்கும் கனலாய்  யாழ்ப்பாணம் வந்து சேர்ந்திருந்தேன். 

1996 – ஆனந்த விகடன் ,குமுதம் என்ற பத்திரிகைகள் எல்லாம் தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் , உதயன் செய்திப்பத்திரிகை தவிர வாசிக்க  வேறு எதுவுமற்ற நிலையில் , நான் ஆரம்பித்த பல்சுவை வார இதழ் 'திசை முகம்'

அதனாலே நான் பட்ட பாடு உரல் படுமோ உளிபடுமோ நான் அறியேன்.
அப்போது பிரபலமாயிருந்த மறைந்த குமுதம் ஆசிரியர் 'அரசு' போல யாருக்கும் நான் யார் என்று தெரியத்தேவை இல்லை , என் எழுத்துக்களே தெரியவேண்டும் என(பயத்தால அல்ல- பயமா? அது என்ன விலை?) எழுத்தாளர் சுஜாத்தா என்கிற ரங்கராஜன் போல ,'தமயந்தி' எனும் புனை பெயரில் எழுதி வந்தேன்.

Monday, April 20, 2020

இராணுவச் சோதனை – மக்கள் மகிழ்ச்சி :எனக்குத் தமிழ் படிப்பித்த என்சினீயர்

என்ஜினீயர் கற்றுத் தந்த தமிழ் 

அண்மையில் பாடசாலைக் காலங்களில் அறிமுகமாகிப் பின்னா பேஸ் புக்கில் கொழுவிக்கொண்ட நபர் ஒருவரை(நண்பர் என்று குறிப்பிடும் அளவு உறவு இல்லை)எதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தது.அவர் இந்தியாவில் கணிப்பொறியியல் பட்டம் படித்தவர், அவர் சொன்னார் ,
"மச்சான் நீ எழுதும் புளக் போஸ்ட்டுகள் யாருக்கும் விளங்காது - அவ்வளவு கடும் தமிழ் பாவிக்கிறாய், வாசிப்பவர்களுக்கு விளங்கும்படி எல்லோ எழுதோணும்,(கொஞ்சம் கோவமான தொனி) அவன் (இருவருக்கும் நண்பன்)  (ஆஸ்த்திரேலியாவிலிருக்கும் பொறியியலாளனாகிய) சிந்தூரனும்(பெயர் மாற்றப்பட்டுள்ளது).என்னோட கதைக்கேக்க 'மணி ஏதோ எழுதுது,ஒண்டும் விளங்கிறேல்ல' என்று நீ எழுதிய 'கண்டியில் பற்றிய தீ' என்ற (நாட்டு நிலை சார்ந்த) கட்டுரை பற்றிக் கதைக்கேக்க சொன்னான்" என்றும் இவர் எனக்குச் சொன்னார்.

Friday, February 7, 2020

வளர்மதி வயசுக்கு வந்துட்டா !



யதார்த்தம் புரியப் புரிய வாழும் ஒவ்வொரு நாளுமே சிக்கலுக்குரியதாகத்தான் இருக்கிறது. தமிழர் கலாச்சாரத்தின் ஓரு பகுதியாகிய – சடங்குகளில் -இன்று, எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாமல் நடாத்தப்படும் ஒரு சடங்குதான் பூப்புனித நீராட்டு விழா.

சின்னத்தம்பியில் குஷ்பூ வயதுக்கு வந்தபோது


தொடர்பாடல் வசதிகள் இல்லாதிருந்த – மருத்துவ  விஞ்ஞான அறிவு விருத்தியடையாத அந்த காலத்தில்,அன்றைய வாழ்ககை முறையில், பெண்களிற்கு மேற்படிப்பு என்று ஒன்றே இல்லாத நிலையில் பெண்பிள்ளையின் வாழ்வில் பருவமடைந்ததும் அடுத்த படி திருமணம் என்றுதான் இருந்தது. 

அந்தக்காலத்தில் தங்கள் வீட்டில் திருமணத்திற்கு ஆயத்தமாக ஒரு பெண் இருப்பதை ஊருக்கு அறிவிக்கும் செயற்பாடாவே இந்தச் சடங்கு உருவாகியிருக்க வேண்டும். அவளது தோற்றப்பொலிவு   பெண் வீட்டாரின் வசதி, செல்வாக்கு என்பவை எவ்வாறானது, என்பதை ஆண் பிள்ளைகள் வைத்திருப்போருக்கு பறைசாற்றும் ஒரு சந்தைப்படுத்தல்(மார்க்கட்டிங் )நுட்பமாக இதை வைத்திருந்தார்கள்.

அதனால்தான் தாய் மாமனைத் திருமணம் செய்யும் வழக்கமுள்ள தமிழ்நாட்டின் பெரும் பகுதிக் கிராமங்களிலும் இன்றுவரை தாய்மாமன் ஓலை கட்டுதல் என்றெல்லாம் சடங்குகளை வைத்திருந்தார்கள். (கைப்புள்ள உனக்குரிய பெண் ரெடியாயிட்டாடா !)

Thursday, May 2, 2019

இரத்தம் கேட்பது சாமியா ? சாத்தானா ? - மதம் பிடித்தவர்க்கு ஒரு மடல்



இறைவன் கேட்டானாம்,

 "பூலோகத்திலிருக்கிற பெருமைமிகு மனிதர்களே உங்களுக்கு வணக்கம், நீங்கள் தகவல்தொழில்நுட்பத்திலும் ,விண்வெளியை அலசும் விஞ்ஞானத்திலும் இன்னும் ஏகப்பட்ட துறைகளிலும் பெரியவர்கள் , தயவு செய்து உங்கள் மதக் கடவுளாகிய என்னை அடுத்த மதத்தவர் இழிவு செய்துவிடாது நீங்கள் பர்ர்த்துக்கொள்ளுங்கள் அதே நேரத்தில் , என்னை வழிபடும் இடத்தில் எவனும் குண்டு போடாதவண்ணம் சி.சி.ரி.வி கமெராக்களையும் ஆட்களையும் போட்டு என்னைப் பாதுகாப்பீர்களாக , அப்படி பாதுகாப்பின் நீங்கள் இறந்த பின்னர் உங்களை சொர்க்கத்திற்கு எடுத்து நீங்கள் எனக்குச் செய்த உதவிக்கு வட்டியும் முதலுமாக நீங்கள் இந்த உலகில் விரும்பிய பலான பலான இன்பங்கள் எல்லாவாற்றையும் உங்களிற்கு நான் தருவேன். டீலா ? , நோ டீ லா ? "

பாவம்!, இந்த அற்பப் பூவுலகில் தன் ஆலயத்தையோ, சிலையையோ, தன்னைப்பற்றிய புத்தகத்தையோ அல்லது தன் பக்தனையோ கூடக் காப்பாற்ற முடியாத அந்த வக்கற்ற  சாமி , சுவர்க்கத்தில் உனக்குத் துணி போட்டு சீட் பிடித்து வைத்திருக்கிறது என்று நம்பி, நீ வாழும்போது சக மனிதனை மனிதனாக மதிக்காது - ஏன் தன்னைக்கூட மதிக்காது முட்டாள் நம்பிக்கைகளை மட்டும் வைத்து அடுத்தவன் இருப்பைக் கேள்விக்குறி ஆக்குகிறாய் !  

எல்லாம் அவன் நாட்டம் ! எல்லாம் அவன் செயல் ! எல்லாம் அவன் முன்கூட்டியே முடிவு செய்தது! என்று அடிக்கடி சொல்லும் ஆத்திகனே அதை நீ  உண்மையில்   நம்பினால் - உனக்கு அடி விழுவதும் அவன் விருப்பம் என்று மூடிக்கொண்டு இருக்கலாம்தானே ? - இருக்க மாட்டாய் - உன்னால் எதுவும் செய்ய இயலாத சூழலில் ஆண்டவன் நாட்டம் அதுதான் என்று பம்முவாய் -உனக்கு சக்தி இருக்கும் இடத்தில் ஆண்டவனுக்காக நீ சண்டை புரிவாய்.

நீ ஆங்காரம் பிடித்த முழு முட்டாள் - அதி சுயநலவாதி.

உனக்கு செலக்டிவ் அம்னீசியா - தேவையான இடத்தில் ஆண்டவன் நாடியது என்பாய் ,தேவையான இடத்தில் ஆண்டவனைக் காப்பாற்றப் போர் செய்ய வேண்டும் என்பாய் - முட்டாள்களின் அடி முட்டாள் நீ. தன்னைத்தான் காப்பாற்ற முடியாத அந்த ஆண்டவன்தான் உன்னையும் இந்த அண்ட சராசரங்கள் உள்ளிட்ட  சர்வத்தையும் படைத்துக் காக்கிறானா ? ஈனப்பிறவியாகிய நீ உனது சக மனிதன்மேல் வெறிக்கூத்தாடித்தான் உன் ஆண்டவன் மனம் குளிர்விக்க வேண்டுமா ?

எல்லா மதப்புத்தகத்திலும் போரைப் பற்றிப்பேசியிருக்கிறார்களோ என்னவோ   தெரியாது - ஆனால் நிச்சயம் அன்பைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள் - அன்பைப் போதிக்காத மார்க்கம் என்ன  மார்க்கமடா ?

கொலையைப் போதிப்பது  யுத்த சாத்திரமாக மட்டும்தான் இருக்க முடியும்.
உன் மார்க்கத்திலும் அன்பைப் பற்றி எவ்வளவு பேசுகிறார்கள் - அது எல்லாம் உன் ஈனக் கண்ணிற்கு எப்படித்தெரியாமல் போயிற்று.

Saturday, April 13, 2019

யசிகாவும் நானும் - என் காதல் கதைகளில் ஒன்று


இப்போது கூட என் வாழ்வில் சில மாதங்களே வந்துபோன - நான் நிரந்தரமாக அடையாது விட்ட அந்த  யசிக்காவுடனான காதல் அனுபவங்களை நினைத்தால்; நெஞ்சிலே ஒரு இனம்புரியாத சோகம் கௌவும்.


என் வயதோடொத்தவர்களில் குறைந்தது 7-10 வருடங்கள் முத்தியதன்மை என்னில் வெளிப்படுவதை எனது நண்பர்கள் அறிவார்கள். அந்த அந்த வயதுக்குரியதைச் செய்யாமால் அதற்கு மிஞ்சியவற்றிலேயே என் நாட்டம் எப்Nபுhதும் செல்லும். நான்காம் வகுப்பிலேயே புஸ்பா தங்கத்துரை உட்பட்ட வப்புக்களின் கதைகளையும் புரிந்து வாசித்துவந்தவன் நான் - இது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கதைக்கு வருவோம்.

Wednesday, January 16, 2019

”மரணம்” எனும் மந்திர விசை !

Sketch by M.Kesharan


மரணத்தை ஓரு எதிர்மறையான விடயமாகவே பார்த்துப்பழகிவிட்டது நமக்கு. அது ஒரு அமங்கலச் சொல்லாகிப்போனது. உச்சரிக்கும்போதே ஒரு வித பயம் தெரியும் பலரது கண்களில்.  சிரமம் பாராது சில கணங்கள் சிந்தித்தால் அதுதான் வெற்றியின் செலுத்துவிசை என்பது புரியும்.

ஒரு பன்னிரண்டு வயதிலிருந்தே இறப்பின் இருப்பு ஒவ்வொரு நொடியும் அடுப்பில் ஏதோ கருகும்  நெடிபோல அடித்துக்கொண்டே இருக்கிறது ,எனக்கு.

அதனல்தான் நான்  ஹார்மோன்கள் முறு‌க்கேற்றும் பதினேழாம் வயதில்கூட எழுதிய ”மரணம்” என்ற கவிதையில்

”ஆழ்கடலுள் சுழியோடி
அண்டங்கள் கடந்து,
அமைதிக்குள் நான் அடங்க,
ஓ மரணம் !
நீவந்தெனக்கு நிம்மதியைத்தரவேண்டும் "

என்று எழுதியிருந்தேன். 

மரணம் என்பது எப்போதுமே எனக்கு ஒரு பிரச்சினையாகப்பட்டதில்லை. மரண பயம் இல்லாமைதான் தவறு செய்வோர் என்று கண்டோர் முன் பயப்படாமல் சீறி நிற்க வைக்கிறது. சாவை விடப் பெரிதாக வேறு என்னத்தைதான் அவர்களால்  வழங்கிவிட முடியும் ?. 

மறைந்த அப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜோப்ஸ் சொன்னதுபோல ”மரணத்தின் முன்னர் எந்த அவமானங்களும் தோல்விகளும்   ஒரு பொருட்டல்ல....” 

வாழ்வில் வென்றவனுக்கும் இறுதியில் மரணம்தான் தோற்றவனுக்கும் மரணம்தான் . கோடி ஆசைகளை வைத்துக்கொண்டு  இடையில் தோற்றால் என்னாகிடுமோ என்று  முயற்சியே எடுக்காமல் மரணத்தை நுகருபவன் எவ்வளது கையாலாகாத அப்பாவியாக இருக்க வேண்டும். ? 

Monday, May 7, 2018

இடம்பெயர்ந்த டீ.என்.ஏ - யாழ்ப்பாணம் பிறழ்ந்த வரலாறு -01



நல்ல டீ.என்.ஏ க்களின்  இடப்பெயர்வின் விளைவே இன்றைய யாழ்ப்பாணம். லண்டனிலும்,கனடாவிலும்,கொழும்பில் வெள்ளவத்தையிலும்  இன்னும் பெருமைமிகு மேதாவித்தனமும் - அடிப்படை மனிதப் பண்புகளுமுள்ள யாழ்ப்பாணத்தவரைக் காண முடிகிறது.

ஆனால் அனைத்து உயர் கலைகளும் கல்வியும் விளைந்து பெருகிய  கலைமாண்புகளின் சொந்த நிலமாகிய யாழ்ப்பாணத்தில் இன்று எந்த பெறுமதியும் அறியாதவர்களையே சுற்றிச் சுற்றிக் காண முடிகிறது.

இன்று காலை,  கனடா வாழ் கலைஞர்களின் ஒரு சில இசை அல்பங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. என்ன ஒரு மென்மை ? என்ன ஒரு உயர் கலை வண்ணம்  ? - என்ன ஒரு இசை - ஒளி அமைப்பு ? . அவர்கள் எல்லாம் யாழ்ப்பாண வழித்தோன்றல்கள் ஆனால் வெளிநாடுகளில் பிறந்தவர்கள். நல்ல தமிழில் பண்ணபான உயர் கலைப் படைப்புக்களை வெளியிட்டிருந்தார்கள்.

கொலையன்,வெறியன், திமிர் பிடித்தவன் என்று இன்றைய யாழ்ப்பாணம் வாழ் மக்களின் தரத்தை வெளிப்படுத்தும் - தாடி மீசை அதிகம் வைத்த  - படிப்பறிவை வெளிப்படுத்தாத ‌ரௌடிக் கதாநாயகர்களின் குப்பைக் கதைகளைக் கொண்ட - அல்லது மிக விலை உயர்ந்த கமெராக்களையும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி - சுவையே இல்லாத - ஆயிரம் தடவை இந்திய சினிமாக்களில் கண்டு சலித்துப்போன கதைகளைக்கொண்ட குறும் திரைப்படங்களைக் கண்டு வெறுத்துப்போன எனக்கு - இந்த வீடியோக்கள் ஈழத்தவர் சினிமா பற்றிப் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

கல்வி-நன்னெறி-மனிதாபிமானம் என்பவை சான்றிதழ் அளவில் மட்டுமே வளர்ந்திருக்கிறது- 1995 இற்கு பின்னர் (மா‌பெரும் இடப்பெயர்வின் பின்)உருவான இன்றைய யாழ்ப்பாணத்தில்.

Monday, October 3, 2016

மதன் எனும் மனிதன் - போதிமர நண்பர்கள் 01

ஆறாம் வகுப்பிலே கொமிக்ஸ் புத்தகங்கள்(சித்திரக் கதைப்புத்தகங்கள்)பரிமாறிக்கொள்வதிலிருந்து அறிமுகமாகி திடீரென நண்பனானவன் மதன். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ் இந்துவிற்கு நுழைந்த மாணவர்களை மட்டும் கொண்டதாக இருந்தது ஆறாம் வகுப்பு - ஈ பிரிவு. அங்கேதான் நாம் சந்தித்துக்கொண்டோம்.




சற்று மிதந்த பற்களுடன் கண்களில்  ஒளியுடன்  மென்மையாகப் பேசக்கூடியவன் மதன்.  நான் கச்சேரி நல்லுார் வீதியில் எனது பெரியம்மாவின் வீட்டில் தங்கியிருந்து பாடசாலை சென்று கொண்டிருந்தேன். நான் ஒரு சிறிய மீன்தொட்டியையும் அதில் கொஞ்சம் மீன்களையும் வைத்திருந்தேன்.

மதனுக்கு அந்த மீன்களில் ஆர்வம். அடிக்கடி அவற்றை வந்து பார்வையிடுவான். மதனுக்கும் எனக்கும் நட்பு ஆரம்பித்து சில வாரங்கள்தான் இருக்கும். ”நீர்”  என்று யாழ்ப்பாணத்துக்கே  உரிய மரியாதைப்பன்மையில் பேசிக்கொள்ளுமளவுக்கு மட்டும்தான் நாம் நெருங்கியிருந்தோம் .

திடீரென்று ஒருநாள் வீட்டு வாசலில் வந்து மணியடித்தான் மதன் .  கையில்  ஒரு நீர் நிரப்பிய பிளாஸ்டிக் பை . அதனுள் ஒரு சோடி அழகிய ஏஞ்சல் மீன்கள். ஏஞ்சல் மீன்கள் என் மனதை மயக்கும் ரம்மியம் மிக்கவை ஆனால் வாங்கக் காசில்லாமல் அம்மா வட்டக்கச்சியிலிருந்து லீவுக்கு வரும்போது கேட்போம் என்று இருந்தேன். 

இவன் கையில் மீன்களுடன் நிற்கிறான். எனக்குப் புரியவில்லை. கதவைத்திறந்து ”என்ன ஐசே ?” (என்ன) என்றேன். ”இது உமக்குத்தான் தொட்டியில விடுவம் வாரும் ”என்று உள்ளே வந்தான். மீன்களைத்தொட்டியில் விட்டு அவை நீந்தும் அழகை இரசித்து விட்டுச் சென்றான். மதன் அவற்றை அப்போது கந்தர்மடம் சந்தியிலிருந்த அம்பிகை அக்கூறியம் என்ற கடையிலிருந்து வாங்கி வந்திருந்தான்.

Friday, September 30, 2016

சிந்தாமணியிடம் சிக்கிய சின்ன மணி ! - எனது வாசிப்பும் யோசிப்பும்.

புத்தகங்கள்  எப்படி நம்மை வளப்படுத்தும் என்பதை புரிகிற வகையில் சொன்னாலாவது அடுத்த தலைமுறைகள் புரிந்த கொள்ளாதா என்ற ஒரு நப்பாசைதான் இது.


இரண்டாம் வகுப்பில் எனது வாசிப்புப்பழக்கம் ஆரம்பித்தது. அப்போது ஆசிரியப்பணியிலிருந்த எனது தாயாருடன் புத்தளத்தில் வசித்துக்கொண்டிருந்தேன்.  எனது தாயார் ஒரு சிறந்த வாசகி. வீடு முழுவதும் கதைப்புத்தகங்களும் ஆனந்த விகடன் குமுதம்  போன்ற சஞ்சிகைகளும் குவிந்து கிடக்கும்.

அந்த நாட்களில் வெளிவந்து கொண்டிருந்த சிந்தாமணி எனும் பத்திரிகையில் வரும் சிறுவர் பகுதியை எனக்கு அறிமுகப்படுத்தி எழுத்துக்கூட்டி வாசிக்க வைத்தார் எனது அன்னை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது . அந்த வித்தியாரம்பம் நடைபெற்றது ஒரு ஞாயிற்றுக்கிழமையில்தான். ஏனெனில் அம்மா சற்று ஓய்வாக இருப்பதும் சிறுவர் பகுதி வெளிவரும் ஞாயிறு சிறப்புப் பதிப்பினை சிந்தாமணி வெளியிடுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான்.

அ்ன்று ஆரம்பித்த வாசிப்பு அப்படியே தீப்பற்றியதுபோல வளரத்தொடங்கியது. அடுத்த ஞாயிறு எப்போது வரும் ,என்று தொடர் கதைகளை படிக்கும் ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தேன்.

Friday, September 16, 2016

நெடுங்குளத்து ”சீ” வால் மீன்


மணிவாசகர்    நரிகளைப் பரிகளாக்கிய கதையினை  நானும் அரங்கேற்றினேன் அப்போது எனக்கு வயது 13.

ஏழாம் வகுப்பு படிக்‌கும் போது மீன் வளர்ப்பில் எக்ஸ்பேர்ட் ஆக இருந்தேன் விதம் விதமான மீன்களை வளர்த்து வந்தேன். சில மீன்கள் பெருகும் போது அவற்றை நண்பர்களுடன் பண்டமாற்றுச்செய்து வேறு வகை மீன்களைப் பெறுவேன்.  ஒன்றுக்கும் உதவாத ”கப்பீஸ்” இன மீன்கள்  கேட்பாரின்றி பெருகும். 

அவற்றின் குஞ்சுகளை எனது அழகிய ஸ்பைடர் மீன்களிற்கு அவ்வப்போது உணவாக வழங்கவேண்டியிருக்கும். ரெட்மோறீஸ் ,பிளக் மோறீஸ்,வைட் மோறீஸ் என்ற மீன்களும் எனது வளர்ப்பில் குடும்பம் நடத்தி குஞ்சுகளைப்‌போடும்.

அவற்றில் வால்கள் ஆங்கில ”சீ” எழுத்துப்போல் இருக்கும் மீன்களும் உண்டு . அவை அதிக விலைக்கு விற்கப்படும்.  எனது சக மீன் வளர்க்கும் நண்பர்களிற்கு சீ வால் மீன் என்றால் பைத்தியம்.

 என் உள்ளங்கையளவு தங்க மீன் ஒன்றை என் நண்பன் வைத்திருந்தான். பெரிய மீன்கள் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம். எனவே அவனிடம் பண்டமாற்று  பற்றிப்பேசினேன். அவன் அதற்கு ஈடாக நான்கைந்து சீ வால் பிளக்மோறீஸ் மீன்களாவது வேண்டும். என்றான்.

நான் தருவதாக வாக்குறுதியளித்தேன்.

Sunday, September 11, 2016

அம்மம்மாக் குழாய் அறிவிப்பாளன்- அனுபவச்சிறகுகள் 05

அம்மம்மாக் குழாயும் அறிவிப்பாளனும்.


நான் மூன்றாம் வகுப்பில் செய்த கார்ட்போட் ரோபோ பற்றிய கட்டுரையை சிலர் சாத்தியமற்றது என்று சொல்லாம்.  (என்னுடன் பழகாதவர்கள்)  எனவேதான் இங்கே ஒரு புகைப்பட ஆதாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இது எனது 7 வயதில் எடுக்கப்பட்ட படம். 

வைரவர் கோவில் திருவிழாவில் வாங்கிய   வாங்கிய அம்மம்மாக் குழலை உடைத்து(சிறிய நாதஸ்வரம் போன்றது)அதன் முன் பகுதியில் இருந்த குழாய் ஒலிபெருக்கி போன்ற பகுதியை  தடியில்  வைத்துக்கட்டி பின்னர் சணல் நுால்களை வயர் போல கற்பனை செய்து தொடர்ந்து இணைத்திருக்கிறேன்.

நான் யாருமில்லாத நேரத்தில் இதன் முன்னே நின்று ஏதோ  பேசுகிறேன் ,அதை அவதானித்த எனது தாயார் போல்றோயிட்(உடனடியாகப்படம் கழுவப்பட்டு வரும்)கமெரா மூலம் ஒளிந்திருந்து பிடித்த படம் இது.

மூன்றாம் வகுப்பு விஞ்ஞானி - அனுபவச்சிறகுகள்-04

-பிஞ்சிலே பழுத்தது-


மூன்றாம்    வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன் அப்போது தான் தொலைக்காட்சியில் நைட் றைடர் , மற்றும் பல விண்வெளி சம்பந்தமான படங்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றால் கவரப்பட்டு நான் உருவாக்கிய ரோபோ என் வயது நண்பர்களிற்கு கிலியை கொடுத்தது.

கிட்டத்தட்ட இப்படித்தான்


கார்ட்போர்ட் பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்பட்ட பொம்மை அது. (அந்தக்கால திரைப்பட ரோபோர்ட்களின் தலை பெட்டிபோல சதுரமாக இருக்கும்) ‌ கைகள் இருக்க வேண்டிய இடத்தில் எனது இலத்திரனியல் பார்ட்ஸ் சேகரிப்பு பெட்டியில் இருந்து எடுத்த மோர்ட்டார்கள் உள்பக்கமாக குத்தப்பட்டு பொருத்தப்பட்டு , கார்ட்போர்ட்டில் தட்டையாக வெட்டி செய்யப்பட்ட   கைகளை அந்த  மோர்ட்டார்  நுனியில்  பொருத்தியிருப்பேன்.

மின் இணைப்புக்கள் எல்லாம்  ஒழுங்கின்றி ரோபோர்ட்டின் முதுகின் வலப்புறம் உள்ள துளை வழியாக வெளியில் வரும். எங்கள் வீட்டின் பின்புற ஹாலில் ஒரு ஐன்னலிற்கு அருகில் இதை நிறுத்தியிருந்தேன். எனவே அந்த ஐன்னலிற்கு வெளியே  (வீட்டின் வெளிப்புறமாக நின்று கொண்டு)இதை இயக்க முடியும்.

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை