Showing posts with label சுய தேடல். Show all posts
Showing posts with label சுய தேடல். Show all posts

Thursday, November 3, 2022

எலான் மாஸ்க்கும் எண்கணித சாஸ்த்திரமும் ! (Numerology for your success ! )






மணிமாறன் மண்ணிமாறன் ஆனகதை

 "நீங்கள் உஙகள் பெயரை இந்த எழுத்துக்களில் மாற்றிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். பண வரவு நீங்கள் நினைத்தாலும் நிற்காது.. .. 

**மணிமாறன் மண்ணிமாறன் ஆன கதை**
"நீங்கள் உஙகள் பெயரை இந்த எழுத்துக்களில் மாற்றிக் கொண்டால் செல்வம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். பண வரவு நீங்கள் நினைத்தாலும் நிற்காது.. .."என்று ஒரு சோதிடர் சொல்லிக்கொண்டிருக்கிறார். நான் அவரது பதிவான கூரையுள்ள, மழை கசிந்து நான் உட்கார்ந்திருந்த இடம் தவிர ஆங்காங்கு ஈரமாகவுள்ள, ஈரத்தினால் பயங்கரமான பூஞ்சை மணம் அடித்துக்கொண்டிருக்கிற, போதாக்குறைக்கு மழையில் நனையப்பிடிக்காமல் அவரது வீட்டுக்குள்ளேயே நின்று ஆடு போட்ட பழுக்கையும், படுத்திருந்த நாயிலிருந்து வந்த வாசத்தையும் சகித்தபடி.....அப்பப்பா பாலாவின் படங்களில் மட்டும் காணக்கூடிய காட்சி!
இது நடந்தது பத்து வருடங்களின் முன்னே, ஒரு நண்பனுடன் அவன் வற்புறுத்தலுக்காகச் சென்று சும்மா ஒரு ஆர்வக்கோளாரில் நானும் சோதிடருடன் பேசியபோது(பேய் இருக்கா ? இல்லையா ?)அவர் சொன்னவை இவை.
சாத்திரியாரே நீங்களும் உங்கள் பெயரை எண் கணிதசாஸ்த்திர முறைப்படி மாற்றிவிட்டால் பிறகென்ன உங்களுக்கும் காசு கொட்டோ கொட்டென்று கொட்டுமே..ஆட்டுக்கு ஒரு கொட்டிலாவது கட்டி வீட்டுக்கூரையில் நாலு ஒடுகளையென்றாலும் மாத்தலாமே ? என்று கேட்க நினைத்தேன், நண்பனின் தர்மசங்கடத்தை நினைத்துக் கேட்கவில்லை.

Friday, January 28, 2022

ஏன் இன்னும் தலை தெறிக்க ஓடுகிறோம்?


 

(நாற்பது வயதிற்கு மேற்பட்ட(அல்லது அப்படி உணர்கின்ற) வாசகர்களிற்கு மாத்திரம்)

புரிந்து விட்டால் ஓடுவதை விட்டுவிடுவோம். புரிந்தாலும் புரியாத மாதிரி இருப்பதில்தான் சலிப்பை குறைத்து வாழும் இரகசியம் இருக்கிறது!. கடைசிவரை புரியாமலே ஓடிக்கொண்டிருப்போர் பாக்கியவான்கள். அவர்கள் சலிப்பின் வெறுமையை தூக்கமின்றி விட்டத்தை வெறித்தபடி அனுபவிப்பதில்லை.
ஓடிய களைப்பில் , அடுத்தநாள் சீக்கிரம் எழுந்து இன்னும் ஓடவேண்டும் எனும் நினைப்பில், படுத்ததும் தூங்கி விடுவார்கள்.
ஓடுவதைக் குறைந்த பின்னர்தான் உலகெங்கிலுமிருந்து பல பந்தயங்களிற்கு வெற்றிலை வைத்து அழைப்பார்கள்.அழைக்கிறார்கள். இது வாழ்க்கையின் முரண்.
இந்த மைதானம் எனக்குரியதல்ல. இங்கே ஓடி முடித்தாயிற்று. அடுத்த மைதானத்தை ஆயத்தப் படுத்து. புதிய விளையாட்டு, புதிய விதிகள், புதிய பரிமாணம்.
காசுப் பெட்டியில் சில்லறை விழும் சத்தத்திற்காய் தேவைகள் தீர்ந்தபின்னரும் ஓடிக்கொண்டே இருப்போர் தம் சவப்பெட்டி அருகே பறைச் சத்தம் கேட்கும்வரையில் நிறுத்துவதில்லை. குறைத்துக் கொள்வதுமில்லை.
.
நடுவயதிற்கு கிட்டே ஆயினும் கொஞ்சம் நின்று, நிதானித்து கூட்டிக் கழித்துப் பாருங்கள். "இவ்வளவு அல்லல்பட்டு ஓடி" சேர்த்தது தந்த நிம்மதி பெரிதாய் எதுவுமில்லை என்பது புரியலாம்.

Tuesday, May 12, 2020

ஸ்டீவ் ஜோப்சும் - சில புள்ளிகளும்

Connecting  the dots - Steve Jobs in Tamil

மறைந்த அப்பிள் நிறுவன அதிபர் - இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில் முயற்சியாளர்களில் ஒருவர் - இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத புத்திசாலிகளில் ஒருவர் 'ஸ்டீவ் ஜோப்ஸ்'. உலகின் ரொப் ரென் செல்வந்தர்கள் லிஸ்டில் அடிக்கடி இடம்பிடித்தவர்.



ஆனால் அவர் பிறப்பே பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. ஸ்டீவ் ஜோப்ஸ் எதிர்பாராத விதமாகக் கருவில் தங்கிய குழந்தை. அப்போது அவரது தாயாருக்குத் திருமணமாகியிருக்கவில்லை. அவர் ஒரு பல்கலைக்கழக மாணவி. அவர் தனது மகனை தத்துக்கொடுக்க விரும்பினார். முதலில் ஒரு சட்டத்தரணி தம்பதியினர் தத்தெடுக்க விரும்பினர்,கடைசித் தருணத்தில் அவர்கள் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுப்பது என முடிவெடுத்தனர்.

தத்தெடுக்கப் பிள்ளையைக் கோரி இருப்போரின் வெயிட்டிங் லிஸ்டில் இரண்டாவதாக இருந்த ஸ்டீவின் வளர்ப்புப் பெற்போருக்கு அடுத்த சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்கள் இருவரும் பட்டம் படித்தவர்கள் அல்ல. தாய் கல்லுரியை முடிக்கவில்லை, தந்தையோ பாடசாலையைத் தாண்டவில்லை. பட்டதாரிகளிற்கே தனது பிள்ளையைத் தத்துக்கொடுப்பேன் என்று முதலில் முரண்டு பிடித்த ஸ்டீவின் பெற்றதாய்,கடைசியில் தனது மகனை ஒரு பட்டதாரியாக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் தத்துக்கொடுத்தார்.

ஸ்டீப் ஜோப்ஸின் வாழ்க்கை இலத்திரனியல் பொருட்களைத் திருத்தும் ஒரு நபரின் வீட்டில் ஆரம்பித்தது. தனது வளர்ப்புத்தந்தையுடன் சேர்ந்து இலத்திரனியல் சம்பந்தமான அறிவை அவர்களது கராஜில் தந்தைக்கு உதவியபடியே  கற்றுக்கொண்டார்.

அவர் 17 ஆண்டுகளின் பின் செல்வந்தர்கள் படிக்கும் றீட் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். பல புத்திசாலிகளையும் சிந்தனையாளர்களையும் போலத்தான், ஸ்டீவிற்கு பல்கலைக்கழகப் படிப்பு தனக்குப் பயன்படாது என்பது சில மாதங்களிலேயே புரிந்து விட்டது. ஆறாவது மாதத்தில் கல்வியை தொடருவதை நிறுத்திக்கொண்டார். 


பல்கலைக்கழத்தைக் கைவிட்ட நிலையில், தொழிலும் இல்லாமல் தங்க இடமும் இல்லாமல் மிகவும் துன்பப்பட்டார்.18 மாதங்கள் அந்தச்சூழலிலேயே சுற்றித்திரிந்தார். கொக்கோ- கோலா ரின்களைப் சேகரித்து விற்றால் சில டாலர்கள் கிடைக்கும். அவற்றைச் சிறு செலவுகளிற்குப் பயன்படுத்தினார். கல்லூரியில் நண்பர்களின் ஹாஸ்டல் அறைகளில் தரையில் தூங்குவார். ஒவ்வொரு ஒவ்வொரு ஞாயிறு இரவுகளிலும் சுமார் 14 கிலோ மீட்டர்கள்(7 mi) நடந்து சென்று – (அமெரிக்காவில்) ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் வழங்கப்படும் அன்னதானத்தை வாங்கி உண்டார். அவர் அதைப்பற்றிச் சொல்லும்போது 'அந்த உணவை மிகவும் விரும்பினேன்'("I loved it" )  என்று சொல்வார். 

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை