Tuesday, May 23, 2017
சூனியக்கிழவிக்கு ஒரு மடல் !
நெடுந்துார ஊர் ஆச்சி !
வியத்துப்போய்
நீங்க எழுதிய
வெறுங் கடதாசி கிடைச்சுது
வள காப்பு வித்து
வயல்காட்டில் களைச்சுழைச்ச
கைக்காசப் போட்டுத்தான்
கடுதாசி போட்டீக
எனை மாத்த
ராப்பகலா
ஏதேதோ செஞ்சீக
அடியாளு வச்சீக
அரைமணிக்கு ஒரு தடவை
வேட்டைக்கு போறேனா
வெறும்வாய மெல்லுறேனான்னு
வேவுகளும் பாத்தீக
சந்திர முகிப்பேய் தொடங்கி
சவுக்கார்ப்பேட்டை பேய்வரைக்கும்
ஏவி எனைக்குழப்ப
ஏவல் வினை செஞ்சீக
மணிக்கொருக்கா கடுதாசி
வலைமனைக்குள்
மறைஞ்சிருந்து
மட மடன்னு வரைஞ்சீக
யார் வாழ்வில் விளக்கேத்த என்வாழ்வை எரிச்சீக
அடுப்பெரிக்க கொள்ளிக்கு
ஆள்விறகாப் போட்டீக
தர்மத்தைப் புரியாமல்
தார்மீகம் சொன்னீக
மநுநீதி காணாமல் உங்க மன
நீதி கண்டீக
மன்னனுக்கும் குடிகளுக்கும்
மாறுகிற நீதி உண்டு
பொன்னனுக்கும் சுப்பனுக்கும்
பொருந்துவன எல்லாம்
போதிமரப்புத்தனுக்குப் பொருந்திடுமா
சொல்லீக ?
மனக்கணக்கால்
மறுபடியும் ஒரு வாழ்வை
மண்ணாக்கி போட்டீக
Subscribe to:
Posts (Atom)
Featured Post
அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences
இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...
