Showing posts with label யதார்த்த நகைச்சுவை. Show all posts
Showing posts with label யதார்த்த நகைச்சுவை. Show all posts

Thursday, July 9, 2020

"முஹம்மது பின் லேடன் இராவணூஸ்" ஆகிய நான்...!




ஆழ்ந்த தூக்கத்திலிருந்த என்னை பள்ளியிலிருந்து வந்த பாங்கு ஓசை விளிக்க வைத்தது. நம்ம ஏரியாவில் பள்ளியே கிடையாதே அப்புறம் எப்படி இப்படி பாங்கு பறிகிறது? என்று எண்ணியபடியே எழுந்து உட்கார்ந்திருந்தேன். 

சோம்பல் முறித்தபடியே எதேச்சையாக எனது உடுப்பைக் கவனித்ததும் நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன்.வெள்ளைக்கலர் ஜிப்பா போட்டிருந்தேன், உள்ளே சாரம்(கைலி) கட்டியிருந்தேன். அதிர்ச்சி மாறாமலே முகத்தைத் தடவிப்பார்த்தால் மீசையைக் காணோம் ஆனால் தாடி பஞ்சமில்லாமல் காடாகக் கிடந்தது. நான் இப்போது இருப்பது எனது அறையும் அல்ல எனது வீடுமல்ல என்பதும் புரிந்தது. அலறியடித்து எழுந்தவுடன் எதிரே இருந்த இராட்சசக் கண்ணாடியொன்றில் எனது உருவம் (அதே மொட்டைமண்டை) ஜிப்பா அணிந்து தாடியுடன் அரேபிய ஷேக் போலவே தோன்றியது.

இது கனவா ? நனவா? என்ன நடக்கிறது நமக்கு ? என்று புரிய முயற்சித்தபடியே சுற்றுமுற்றும் பார்த்தேன். அந்த அறை படு அன்னியமானது. அங்கு நான் படுத்திருநத கட்டில் பல வேலைப்பாடுகள் நிறைந்த வாழ்நாழில் கண்டிராத மரக்கட்டில் ஐந்து பேர் படுக்கலாம். அந்த அறை முழுவதும் பெரிய பித்தளைப் பாத்திரங்கள், அன்னம்போலவும் , சிங்கம் போலவும் செய்யப்பட்ட நாற்காலிகள் கிடந்தன, என் கட்டிலுக்குக் கீழே நிலத்தில் ஓலைச் சுவடிகள் கிடந்தன.இஸ்லாமியர்கள் அணியக்கூடிய ஒரு தொப்பியும் அருகில் கிடந்தது.

Tuesday, May 5, 2020

கொழும்புக்கு வந்த சோதனை !


பாத்ரூமுக்குள் நண்பனின் பகீர் அனுவபம் !

கடும் யுத்த சூழலில் கொழும்புக்கு வந்து பல்கலைக்கழக அனுமதி கிடைத்தபின்னர் நடைபெறும் ஆங்கில வகுப்பிற்காக(GELT) காத்திருந்த காலங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவத்தைக் கொடுத்துக்கொண்டே இருந்தன.

தினசரி சந்தித்துக்கொள்ளும் எம் நட்புவட்டத்தில் சுமார் – 5-6 நபர்கள் இருப்பார்கள். என்னைத்தவிர அதில் பெரும்பான்மை, மெரிட்டில் கொழும்பு மருத்துவ பீடத்திற்கு தெரிவானவர்கள்.  


நாங்கள் தினசரி  வெள்ளவத்தைப் போலீஸ் ஸ்டேசன் அருகில்,ஹாமேர்ஸ் அவெனியூவில் உள்ள  நண்பன் நாகரூபன் வீட்டில் ஒன்று கூடுவோம்.வந்து நாலு மாதங்களின் பின், ஒரு நாள் வழமைபோல் நாகரூபன் வீட்டில் நண்பர்களது அலட்டல் கச்சேரி போய்க்கொண்டிருந்தது. என்னருகே அமர்ந்திருந்த நண்பன் முருகன்,(சத்தியமாய்ப் பெயர் மாற்றப்பட்டுள்ளது) முகத்தை படு சீரியசாக வைத்துக்கொண்டு சொன்னான்:

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை