Showing posts with label Learn Psychology in Tamil. Show all posts
Showing posts with label Learn Psychology in Tamil. Show all posts

Saturday, January 22, 2022

உளநலப் பாதிப்பா ? யாரிடம் உதவி பெறுவது ?


சைக்கோசிஸ் - நியூரோசிஸ்(Psychosis, Neurosis) என இரண்டு வகையில் பிரித்துப்பார்க்கப்டக்கூடிய மனநலம் சார்ந்த பிரச்சனைகளில், சைக்கோசிஸ் எனப்படுவதுதான் நாம் நிஜ உலகத்தைவிட்டு விலகி இருத்தல்- அல்லது சுய உணர்வின்றி நடந்துகொள்ளல் (யாதார்த்தமற்ற நிலை) இதை உலக வழக்கில் மக்கள் சொல்லும் சொற்களாகிய 'சித்தப்பிரமை' மற்றும் 'பைத்தியம்' ஆகிய சொற்களுடன் இணைத்துப்பார்க்க முடியும்.

இரண்டாவது வகையாகிய நியூரோசிஸ் எனப்படக்கூடிய மனநலப் பிரச்சனைகளின்போது (inner struggles, mental and physical disturbances) பாதிக்கப்ட்டவர் சுய உணர்வுடனும் குறிப்பிட்ட சில பிரச்சனைகளால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை பகுதியளவாவது உணர்ந்தும் இருப்பர். மனச்சோர்வு, மன அழுத்தம், உறக்கப்பிறழ்வுகள், உண்ணல் சார்ந்த பிரச்சனைகள்(அதிகம் உண்ணல், அதீத உணவு தவிர்த்தல்...), பயவுணர்வுகள், அதீத கோபம் உட்பட்ட திடீர் உணர்வு நிலை மாறல்கள் போன்ற சில இதற்கான உதாரணங்கள்.(Depression, stress, eating disorders, personality disorders, phobias, sudden mood swings -bipolar etc..) 

Thursday, November 19, 2020

Tamil Psychology Youtube Channel - Learn psychology in Tamil .தமிழில் உளவியல் வீடியோக்கள் !


Tamil Psychology Tamil Youtube Channel (Click here)


அனைத்து மனிதர்களுமே தம்வாழ்நிலைக்கு ஏற்ற அளவிற்கான உளவியலை இயற்கையாகவே அறிந்தவர்கள்தான்.

மனம் மற்றும் நடத்தை பற்றிய விஞ்ஞான ரீதியான கல்வியே உளவியல் ஆகும்.

சைக்('psyche') என்ற சொல் கிரேக்கத்தில்- உயிரைக் குறிக்கும், லொகோஸ் என்பது கற்றல்('discourse or to study')எனப்பொருள் படும், எனவே Psychology என்பது உயிரைப்பற்றிக் கற்றல் என்று பொருள்படும். 

மனம் பற்றிய சிந்தனை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் காணப்பட்டது. எனினும்  உளவியல் துறை என்று ஒன்று முறைப்படுத்தப்பட்டு சுமார் 150 (1879) வருடங்கள்தான் ஆகின்றன. இரசாயனவியல்,பௌதிகம் போன்ற பல துறைகளுடன் ஒப்பிடும்போது உளவியல் துறை தவழ்ந்து வரும் ஒரு குழந்தை என்று சொல்லலாம். (1879 - ஜேர்மானிய ஆய்வாளர் வுண்ட் என்பவரால் உளவியல் ஆய்விற்கான ஆய்வுகூடம் அமைக்கப்ட்ட ஆண்டு இது )



ஆனால் பொதுமக்கள் மத்தியில் உளவியல் துறை பற்றிய பல தவறான புரிதல்களும் , தேவைக்கு அதிகமான நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பும் உள்ளதை அவதானிக்கலாம். உதாரணமாக "உளவியல் படித்தவர் அடுத்தவர் மனதைப் புட்டுப் புட்டு வைப்பாராம்.." போன்ற கூற்றுக்களும் ,'உளவியலாளர்கள் எல்லோருமே ஆழ்மனதில் புகுந்து பல அதிசயங்களை நிகழ்த்துவோர்' என்ற நம்பிக்கைகளும்(முற்பிறப்பை அறிதல் etc..) மக்கள்  மக்கள் மத்தியில் நிலவுகின்றன. 

Featured Post

அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences

  இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...

அதிகம் படிக்கப்பட்டவை