Tuesday, April 21, 2015
கனவைத் துரத்தும் நாய்கள்.
கனவிலும்
நனவிலும்
எ்னைச் சுற்றி ஊளையிட்டுத்திரியும்
ஒரு கூட்டம் நாய்கள்.
நான் ஒன்றும் மணிவாசகர் இல்லைத்தான்
எனினும..
எனைச்சுற்றி நடப்பது என்னவோ
நரிகளைப் பரிகளாக்கிய கதைதான்.
இந்த
உயிரின் ஆழம் வரை செல்லும் ஊளை.
நாய்களுக்குரியதல்ல.
இது நடுக்காட்டில் எங்கோ
பிணம் தின்று கொழுத்த பேய்கள் மொழி.
பேய்களைப்பிடித்து நாய்களாக்கியது யார்.
என் மனசில் இப்போதெல்லாம் துழாவும் ஒற்றைக் கேள்வி இதுதான்.
பல வேளைகளில்..
நாய்க்கும் நரிக்கும் பிறந்த கலப்பு இனம்போலும் தெரியும்.
அவை ஒன்று, இரண்டல்ல, எண்ணிற் பல.
ஒன்று , எனது வேகமான நடைகளின் போது காலை இடறி ஓடும்.
இன்னொன்று ,
நடக்கும் போது கூடவே வரும்.
குறிப்பறிவது போல் கொள்ளிக் கண்களை விரித்து
என்மனதை வேவு பார்க்கும்.
சில வேளை இரண்டு இணைந்து நான் உட்காரும் முன்னே என் ஆசனங்களில் சிறுநீர் கழிக்கும்.
அவற்றில் ஒன்று உடலால் உராய்ந்து என் சுற்றுப்புறங்களை
சுத்தம் செய்வதாய் பாவ்லா காட்டுவதும் உண்டு.
விலகிக் கண்மூடின்
என்
கனவுகளில்
எப்போதும் வரும் அதே ஒற்றைப் பனைக் காட்டில்
ஓலமிட்டு
நான் ஓட
பின்னால்
இவற்றில் சில.
என் நன்மைக்காக இந்த சாத்தான்களை
இங்கே அனுப்பியதாய்
அசரீரி கேட்டது ஒரு நாள்.
நான் நம்பவில்லை
தேவ வசனங்களை எந்த சாத்தான்
எப்படித்தான் ஓதினாலும்
அது
திறக்கப்போவது என்னவோ
நரகத்தின் வாயிலைத்தான்.
அழையாமல் வந்த
இநத அசிங்கப் பிறவிகள்
அடிக்கடி கடித்ததில்
கிழிந்து தொங்குகிறது
அழுக்குத்துணியாக
என்
தனிமனித வாழ்வு.
Labels:
மாறன் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
அன்புக்குரியவர்களின் இழப்பும் - உளவியல் மற்றும் சமூக ஆதரவும். Grieving & Sharing Condolences
இறப்புச்செய்திகள் வருகின்றபோது, அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பல நேரங்களில் பலருக்குத்தெரிவதில்லை.சில சமூக அமைப்புக்கள்(Societal...
அதிகம் படிக்கப்பட்டவை
-
”பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றாள் அவ்வைப்பாட்டி. நமது தினசரி வாழ்வில் பல விதமாக பிச்சை எடுக்கும் கற்றவர்களைக் காண்கிறோம். நேற்ற...
-
This article summarizes the dark side of using VPN(Virtual Private Network)services for free. How your privacy could be on risk? and, wh...
-
அம்புலிமாமா எனும் அரும்பெரும் பொக்கிஷத்தை என் சமவயதில் பயணிப்பவர்களால் பெரும்பாலும் மறந்திருக்க முடியாது.” வட்ஸ் அப்பும்”, ” வைபரும்”, ” பே...
-
யூனிவேர்சல் லோ ஒப் அற்றாக்சன் சீரிஸ் -01 Law of Attraction in Tamil இணையத்தளங்களில் தற்போது பரபரப்பாகவிவாதிக்கப்பட்டும் கொண்ட...
-
நல்ல டீ.என்.ஏ க்களின் இடப்பெயர்வின் விளைவே இன்றைய யாழ்ப்பாணம். லண்டனிலும்,கனடாவிலும்,கொழும்பில் வெள்ளவத்தையிலும் இன்னும் பெருமைமிகு...
-
என் வகுப்புக்கு மேற்பட்ட பாடசாலை விஞ்ஞானப் புத்தகங்களை வாசித்து அவற்றிலிருந்த பரிசோதனைகளைச் செய்து வருவதாலும்...பழைய ட்றங்குப் பெட்டி...
-
ஆறாம் வகுப்பிலே கொமிக்ஸ் புத்தகங்கள்(சித்திரக் கதைப்புத்தகங்கள்)பரிமாறிக்கொள்வதிலிருந்து அறிமுகமாகி திடீரென நண்பனானவன் மதன். புலமைப்பரிசில்...
-
மணிவாசகர் நரிகளைப் பரிகளாக்கிய கதையினை நானும் அரங்கேற்றினேன் அப்போது எனக்கு வயது 13. ஏழாம் வகுப்பு படிக்கும் போது மீன் வளர்ப்பி...
-
ஓ.எல் பரீட்சை முடிந்ததும் கூவிக் கூவிப் பிள்ளை பிடிக்கப்போகும் ரியூசன் மார்பியாக்களிடமிருந்து எங்கள் பிள்ளைகளைக் காத்தருளுங்கள். Plea...
-
Stories for young entrepreneurs 02 (Learning is everything) நஸீபா எனது முதல் மாணவி எனது முதலாவது மாணவி நஸீபாவும் அவரது குழந்தையு...

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் ஊக்கமருந்தாய் அமையும் .